நண்ணேன் பரத்தநின் மார்பு.
(1311)
விளக்கம்:பரத்தனே! பெண்தன்மை உடையவர் எல்லாரும், பொதுப் பொருளாகக் கொண்டு நின்னைக் கண்ணால் உண்பார்கள். ஆதலால்நின் மார்பை நான் தழுவமாட்டேன்.
ஊடி யிருந்தேமாத் தும்மினார் யாந்தம்மை
நீடுவாழ் கென்பாக்கு அறிந்து.
(1312)
விளக்கம்:காதலரோடு யாம் ஊடியிருந்தேமாக. அவரும் அவ்வேளையில் யாம் தம்மை நீடுவாழ்க என்று வாழ்த்துரை சொல்லுவோம் என்றுநினைத்து தும்மினார்.
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.
(1313)
விளக்கம்:மரக்கிளையிளிருந்து கொணர்ந்த பூவைச் சூட்டினாலும், என் காதலி, நீர் இந்த அழகை எவளோ ஒருத்திக்குக் காட்டுவதற்கேஎனக்குச் சூட்டினீர் என்று காய்வாள்.
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.
(1314)
விளக்கம்:யாரினும் நின்னையே விரும்புகின்றோம் என்று சொன்னேன். அவள், யாரினும்? யாரினும்? என்று கேட்டவளாக என்னோடும்ஊடிப் பிணங்கினாள்.
இம்மைப் பிறப்பிற் பிரியலம் என்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள்.
(1315)
விளக்கம்:இந்தப் பிறப்பிலே நாம் பிரியமாட்டோம் என்று சொன்னேன். இனி வரும் பிறப்பில் பிரிவோம் என்று நான் கூறியதாகக் கருதிக்கண்களில் நீரைக் கொண்டனள்.
உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்
(1316)
விளக்கம்:நின்னை நினைத்தேன் என்றேன். நினைத்தது உண்டாயின் மறந்திருந்ததும் உண்டல்லவோ! என்னை ஏன் மறந்தீர்? என்று சொல்லி,அவள் தழுவாமல் பிணங்கினாள்.
வழுத்தினாள் தும்மினே னாக அழுத்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.
(1317)
விளக்கம்:யான் தும்மினேன். நூறாண்டு என்று கூறி வாழ்த்தினாள். அடுத்து அதைவிட்டு, எவர் நினைத்ததனாலே நீர் தும்மினீர் என்றுகேட்டுக் கேட்டு அழுதாள்.
தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.
(1318)
விளக்கம்:அவள் பிணங்குவாள் என்று பயந்து நான் எழுந்த தும்மலையும் அடக்கினேன். உம்மவர் நினைப்பதை எமக்குத் தெரியாதபடிமறைத்தீரோ என்று அவள் அழுதாள்.
தன்னை யுணர்த்தினும் காயும் பிறர்க்குநீர்
இந்நீரர் ஆகுதீர் என்று.
(1319)
விளக்கம்:அவள் ஊடிப் பிணங்கியபோது அதைத் தெளிவித்து இன்புறுத்தினாலும், நீர் பிறமகளிர்க்கும் இத் தன்மையரே ஆவீர் என்றுஎன்மேற் சினம் கொள்வாள்.
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று.
(1320)
விளக்கம்:அவள் அழகையே நினைத்து வியந்து பார்த்தாலும், நீர் எவரையோ மனத்திற்கொண்டு எல்லாம் ஒப்பிட்டுப் பார்த்தீரோ என்றுகேட்டுச் சினம் கொள்வாள்.
No comments:
Post a Comment