Sunday, May 31, 2009

133. ஊடல் உவகை

இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவரளிக்கு மாறு.
(1321)
விளக்கம்:

அவரிடம் தவறு எதுவும் இல்லையானாலும், அவரோடு பிணங்குதல், அவர் நம்மீது மிகுதியாக அன்பு செலுத்தும்படி செய்வதற்குவல்லது ஆகும்.


ஊடலில் தோன்றும் சிறுதுளி நல்லளி
வாடினும் பாடு பெறும்.
(1322)
விளக்கம்:

அவரோடு ஊடுதலாலே உண்டாகின்ற சிறு துன்பம், அந்தப் பொழுதிலே அவர் செய்யும் நல்ல அன்பை வாடுவதற்குச் செய்தாலும்,பின்னர்ப் பெருமை பெறும்.

புலத்தலின் புத்தேணாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.
(1323)
விளக்கம்:

நிலத்தோடு நீர் பொருந்தினாற்போல நம்மொடு கலந்த அன்பு உடையவரான காதலருடன் ஊடுவதைக் காட்டிலும் தேவருலகத்துஇன்பமும் சிறந்ததாகுமோ?

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை.
(1324)
விளக்கம்:

காதலரைத் தழுவி விடாதேயிருக்கும் ஊடலினுள்ளே, என் உள்ளத்தின் வன்மையை உடைப்பதற்கு வலிமையான படையும்தோன்றுகின்றது.

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறிலின் ஆங்கொன்று உடைத்து.
(1325)
விளக்கம்:

தவறு இல்லாதவரானபோதும், நம்மால் காதலிக்கப்பட்ட மகளிரின் மென்மையான தோள்களை ஊடலால் நீங்கியிருக்கும்போது ஊடலிலும் ஓர் இன்பம் உள்ளது.

உணலினும் உண்டது அறலினது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.
(1326)
விளக்கம்:

உண்பதைக் காட்டிலும் முன்னுண்டது செரித்தலே இன்பமாகும். அதுபோலவே, காமத்தில் கூடிப்பெறும் இன்பத்தைவிடஊடிப்பெறும் இன்பமே சிறந்தது.

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலில் காணப் படும்.
(1327)
விளக்கம்:

ஊடல் களத்திலே தோற்றவரே வெற்றி பெற்றவர். அந்த உண்மையானது ஊடல் தெளிந்தபின் அவர் கூடிமகிழும்போதுதெளிவாகக் காணப்படும்.

ஊடிப் பெறுகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.
(1328)
விளக்கம்:

நெற்றி வியர்வை அரும்பும்படி காதலனுடன் கூடும்போது உண்டாகும் இன்பத்தை, ஊடியிருந்து அவர் உணர்த்த மீளவும் சேர்ந்துஇன்புறும்போது பெறுவோமோ?

ஊடுக மன்னோ ஒளியிழை யாம்இரப்ப
நீடுக மன்னா இரா.
(1329)
விளக்கம்:

ஒள்ளிய இழையை உடையாள் இன்னும் ஊடுவாளாக! அதனைத் தணிவிக்கும் வகையிலே யாம் அவளை இரந்து நிற்கும்படியாகஇராக்காலமும் இன்னும் நீள்வதாக.

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.
(1330)
விளக்கம்:

ஊடுதல் காமவாழ்விற்கே இன்பம் தருவதாகும். காதலர் உணர்த்த உணர்ந்து கூடித் தழுவதலையும் பெற்றால், அஃது அதனினும்மிகுந்த இன்பமாகும்.

132. புலவி நுணுக்கம்

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.
(1311)
விளக்கம்:

பரத்தனே! பெண்தன்மை உடையவர் எல்லாரும், பொதுப் பொருளாகக் கொண்டு நின்னைக் கண்ணால் உண்பார்கள். ஆதலால்நின் மார்பை நான் தழுவமாட்டேன்.


ஊடி யிருந்தேமாத் தும்மினார் யாந்தம்மை
நீடுவாழ் கென்பாக்கு அறிந்து.
(1312)
விளக்கம்:

காதலரோடு யாம் ஊடியிருந்தேமாக. அவரும் அவ்வேளையில் யாம் தம்மை நீடுவாழ்க என்று வாழ்த்துரை சொல்லுவோம் என்றுநினைத்து தும்மினார்.

கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.
(1313)
விளக்கம்:

மரக்கிளையிளிருந்து கொணர்ந்த பூவைச் சூட்டினாலும், என் காதலி, நீர் இந்த அழகை எவளோ ஒருத்திக்குக் காட்டுவதற்கேஎனக்குச் சூட்டினீர் என்று காய்வாள்.

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.
(1314)
விளக்கம்:

யாரினும் நின்னையே விரும்புகின்றோம் என்று சொன்னேன். அவள், யாரினும்? யாரினும்? என்று கேட்டவளாக என்னோடும்ஊடிப் பிணங்கினாள்.

இம்மைப் பிறப்பிற் பிரியலம் என்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள்.
(1315)
விளக்கம்:

இந்தப் பிறப்பிலே நாம் பிரியமாட்டோம் என்று சொன்னேன். இனி வரும் பிறப்பில் பிரிவோம் என்று நான் கூறியதாகக் கருதிக்கண்களில் நீரைக் கொண்டனள்.

உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்
(1316)
விளக்கம்:

நின்னை நினைத்தேன் என்றேன். நினைத்தது உண்டாயின் மறந்திருந்ததும் உண்டல்லவோ! என்னை ஏன் மறந்தீர்? என்று சொல்லி,அவள் தழுவாமல் பிணங்கினாள்.

வழுத்தினாள் தும்மினே னாக அழுத்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.
(1317)
விளக்கம்:

யான் தும்மினேன். நூறாண்டு என்று கூறி வாழ்த்தினாள். அடுத்து அதைவிட்டு, எவர் நினைத்ததனாலே நீர் தும்மினீர் என்றுகேட்டுக் கேட்டு அழுதாள்.

தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.
(1318)
விளக்கம்:

அவள் பிணங்குவாள் என்று பயந்து நான் எழுந்த தும்மலையும் அடக்கினேன். உம்மவர் நினைப்பதை எமக்குத் தெரியாதபடிமறைத்தீரோ என்று அவள் அழுதாள்.

தன்னை யுணர்த்தினும் காயும் பிறர்க்குநீர்
இந்நீரர் ஆகுதீர் என்று.
(1319)
விளக்கம்:

அவள் ஊடிப் பிணங்கியபோது அதைத் தெளிவித்து இன்புறுத்தினாலும், நீர் பிறமகளிர்க்கும் இத் தன்மையரே ஆவீர் என்றுஎன்மேற் சினம் கொள்வாள்.

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று.
(1320)
விளக்கம்:

அவள் அழகையே நினைத்து வியந்து பார்த்தாலும், நீர் எவரையோ மனத்திற்கொண்டு எல்லாம் ஒப்பிட்டுப் பார்த்தீரோ என்றுகேட்டுச் சினம் கொள்வாள்.

131. புலவி

புல்லா திராஅப் புலத்தை அவருறும்
அல்லல்நோய் காண்கஞ் சிறிது.
(1301)
விளக்கம்:

நாம் ஊடுரும்போது அவர் அடைகின்ற அல்லல் நோயையும் சிறிது நேரம் காணலாம். அதற்காக அவர் வந்ததும் அவர்பாற்சென்று தழுவாமல் பிணங்கியிருப்பாயாக.


உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.
(1302)
விளக்கம்:

உணவுப் பண்டங்களில் அளவாக உப்புச் சேர்ந்திருப்பது போன்றதே ஊடல். அதை அளவுகடந்து சிறிது நீளவிட்டாலும் உப்பின்மிகுதிபோல அது கெட்டுவிடும்.

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.
(1303)
விளக்கம்:

தம்மோடு ஊடியவரைத் தெளிவித்து தழுவாமல் விட்டுவிடுதல், துன்புற்று வருந்துவோரை மேலும் துன்பஞ் செய்து வருந்தச்செய்வதுபோன்ற கொடுமையாகும்.

ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.
(1304)
விளக்கம்:

ஊடிப் பிணங்கியவரைத் தெளிவித்து அன்பு செய்யாமல் கைவிடுதல், முன்பே நீரில்லாது வாடிப்போன வள்ளிக்கொடியின் வேரைஅறுப்பதுபோன்றது ஆகும்.

நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை
பூவன்ன கண்ணா ரகத்து.
(1305)
விளக்கம்:

நல்ல தகைமைகள் பொருந்தியுள்ள நல்ல ஆடவருக்கு அழகாவது, மலரன்ன கண்களையுடைய அவர் காதலியர் இடத்தேஉண்டாகும் ஊடலின் சிறப்பே ஆகும்.

துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.
(1306)
விளக்கம்:

பெரிய பிணக்கமும் சிறிதான பிணக்கமும் இல்லாமற் போனால், காமமானது மிகக் கனிந்த கனியும் பழுக்காத கருக்காயும் போலபயனற்றதாகும்.

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று.
(1307)
விளக்கம்:

ஊடியிருத்தலிலும் காதலர்க்கு உண்டாவதோர் துன்பம் உளது. அது கூடியிருப்பதுதான் இனிமேல் நீட்டிக்காதோ என்று நினைத்துவருந்தும் அச்சமாகும்.

நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி.
(1308)
விளக்கம்:

நம்மாலே இவரும் நோயுற்றார் என்று உணர்ந்து அதைத் தீர்க்க முயலும் காதலர் இல்லாதபோது வீணாக வருத்தம் அடைவதனால்என்ன பயன்?

நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.
(1309)
விளக்கம்:

நீரும் நிழலிடத்தே உள்ளதானால் இனியதாகும். அதுபோன்றதே ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தே நிகழுமானால்இனிமையைத் தருவதாகும்.

ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா.
(1310)
விளக்கம்:

ஊடல் கொண்டபோது தெளிவித்து இன்பம் செய்யாமல் வாடவிடுகின்றரோடு, எம் நெஞ்சம் கூடுவோம் என்று நினைப்பது அதுகொண்டுள்ள ஆசையினாலே ஆகும்.

130. நெஞ்சொடு புலத்தல்

அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீயெமக்கு ஆகா தது.
(1291)
விளக்கம்:

நெஞ்சமே, அவர் நெஞ்சமானது நம்மை மறந்து அவர் விருப்பத்தையே மேற்கொள்வதைக் கண்டபின்னரும், நீதான் எமக்குத்துணையாகததுதான் எதனாலோ?


உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைக்
செறாஅர்செனச் சேறிஎன் நெஞ்சு.
(1292)
விளக்கம்:

என் நெஞ்சமே, நம்மேல் அன்புகொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று நினைந்து அவரிடமேசெல்கின்றாயே, அதுதான் எதனாலோ?

கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சசேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்.
(1293)
விளக்கம்:

நெஞ்சமே, நீ நின் விருப்பத்தின்படியே அவர் பின்னாகச் செல்லுதல், துன்பத்தாலே கெட்டுப்போனவருக்கு நண்பராக யாருமேஇல்லை என்பதனாலோ?

இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.
(1294)
விளக்கம்:

நெஞ்சமே, நீதான் ஊடுதலைச் செய்து அதன் பயனையும் நுகரமாட்டாய். இனிமேல் அத்தகைய செய்திகளைப்பற்றி நின்னோடுஆராய்பவர்தாம் எவரோ?

பெறாஅமை அஞ்சும் பெறிற்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.
(1295)
விளக்கம்:

அவரைப் பெறாத போதும் அஞ்சும். பெற்றபோதும் பிரிவாரோ என்று அஞ்சும். இவ்வாறு என் நெஞ்சம் நீங்காத துயரையேஉடையதாகின்றது.

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினியே இருந்ததென் நெஞ்சு.
(1296)
விளக்கம்:

அவரைப் பிரிந்த நாளில், தனியே இருந்து நினைத்தபோது, என் நெஞ்சம் எனக்குத் துணையாகமால், என்னைத் தின்பதுபோலத்துன்பம் தருவதாக இருந்தது.

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு.
(1297)
விளக்கம்:

காதலரை மறக்கவியலாத என்னுடைய சிறப்பில்லாத மடநெஞ்சத்தோடு சேர்ந்து மறக்கக்கூடாததாகிய நாணத்தையும் நான் மறந்தேன்.

எள்ளின் இளிவாம் என்றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.
(1298)
விளக்கம்:

பிரிந்த கொடுமையாளரை இகழ்ந்தால் இழிவாகும் என்று நினைத்து, அவர்மேல் உயிர்போலக் காதல்கொண்ட என் நெஞ்சம்அவரது உயர்பண்புகளையே நினைக்கிறதே.

துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சம் துணையல் வழி.
(1299)
விளக்கம்:

தாம் உரியதாக அடைந்திருக்கும் தம் நெஞ்சமே தமக்குத் துணையாகாத பொழுது, ஒருவருக்குத் துன்பம் வந்த காலத்தில் வேறுஎவர்தாம் துணையாவார்கள்.

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.
(1300)
விளக்கம்:

தாம் சொந்தமாக உடைய நெஞ்சமே தமக்கு உறவாகாதபோது, அயலார் உறவில்லாதவராக அன்பற்று இருப்பது என்பதும்இயல்பானதே ஆகும்.

129. புணர்ச்சி விதும்பல்

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற்கு உண்டு.
(1281)
விளக்கம்:

நினைத்தபொழுதில் களிப்படைவதும், கண்ட பொழுதிலேமகிழ்ச்சி அடைவதும் ஆகிய இரண்டு நிலையும், கள்ளக்குக் கிடையாது, காமத்திற்கு உண்டு.


தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.
(1282)
விளக்கம்:

பனையளவு பெரிதாகக் காமம் நிறைந்து வரும்பொழுது, காதலரோடு தினையளவுக்குச் சிறிதளவேனும் ஊடிப் பிணங்காமல்இருத்தல் வேண்டும்.

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணாது அமையல கண்.
(1283)
விளக்கம்:

என்னைப் பேணி அன்பு செய்யாமல் புறக்கணித்து, தான் விரும்பியபடியே அவன் செய்தாலும், என் காதலனைக் காணாமல் என்கண்கள் அமைதி அடையவில்லையே.

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதென் நெஞ்சு.
(1284)
விளக்கம்:

தோழி, நான் அவரோடு ஊடுதலையே நினைத்துச் சென்றேன். ஆனால், என் நெஞ்சமோ அதை மறந்துவிட்டு, அவரோடுஇணைந்து கூடுவதிலேயே சென்றதே.

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட விடத்து.
(1285)
விளக்கம்:

மை எழுதும்போது, எழுதும் கோலைக் காணாத கண்ணின் தன்மையைப்போல், என் காதலனைக் கண்டபோது, அவள்குற்றங்களையும் யான் காணாமற் போகின்றேனே.

காணுங்கால் காணேன் தவறாய காணக்கால்
காணேன் தவறல் லவை.
(1286)
விளக்கம்:

என் காதலனைக் காணும்போது, அவர் போக்கிலே தவறானவற்றையே காணமாட்டேன். அவரைக் காணாதபோதோ, தவறல்லாதநல்ல செயல்களையே யான் காணேன்.

உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலர்ந்து.
(1287)
விளக்கம்:

ஓடும் வெள்ளம் இழுத்துப் போகும் என்பதை அறிந்தும் அதனுள் பாய்கின்றவரைப்போல, ஊடுதல் பயனில்லை என்பதைஅறிந்தும், நாம் ஊடுவதால் பயன் என்ன?

இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.
(1288)
விளக்கம்:

கள்வனே, இழிவு வரத் தகுந்த துன்பங்களையே செய்தாலும், கள்ளுண்டு களித்தவர்க்கு மென்மேலும் ஆசையூட்டும்கள்ளைப்போல், நின் மார்பும் ஆசையூட்டுகிறதே.

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.
(1289)
விளக்கம்:

அனிச்ச மலரைக் காட்டிலும் காமம் மிக மென்மையானது. அதன் தன்மை அறிந்து அதன் சிறந்த பயனையும் பெறக் கூடியவர்கள்உலகத்தில் சிலரே யாவர்.

கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.
(1290)
விளக்கம்:

கண் நோக்கத தளவிலே பிணங்கினாள். பின், என்னைக் காட்டிலும்தான் தழுவுவதிலே விருப்பம் கொண்டவளாகத் தன்பிணக்கத்தையும் மறந்து, அவள் கலங்கினாள்.

128. குறிப்பறிவுறுத்தல்

சுரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன்று உண்டு.
(1271)
விளக்கம்:

நீதான் மறைத்தாலும், நின் மறைப்பையும் கடந்து, நின் கண்கள் எனக்குச் சொல்ல முற்படுகின்ற ஒரு செய்தியும் நின்னிடத்தில்உள்ளதாகும்.


கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோள் பேதைக்குப்
பெண்ணிறைந்த நீர்மை பெரிது.
(1272)
விளக்கம்:

கண் நிறைந்த பேரழகும், மூங்கில்போல் அழகிய தோள்களும் கொண்ட என் காதலிக்கு பெண்மை நிறைந்த தன்மையோ பெரிதாகஉள்ளது.

மணியில் திகழ்தரும் நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன் றுண்டு.
(1273)
விளக்கம்:

நூலில் கோத்த மணியினுள்ளே காணப்படும் நூலைப்போல என் காதலியின் அழகினுள்ளேயும் அமைந்து, புறத்தே விளங்குகின்றகுறிப்பும் ஒன்று இருக்கின்றது.

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்கும் உள்ளதொன்று உண்டு.
(1274)
விளக்கம்:

அரும்பினுள்ளே அடங்கியிருக்ணுன்ற மணத்தைப்போல என் காதலியின் புன்முறுவலின் உள்ளே அடங்கியிருக்கும் உள்ளத்தின்குறிப்பும் ஒன்று உள்ளது.

செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.
(1275)
விளக்கம்:

செறிந்த தொடியுடையவளான என் காதலி செய்துவிட்டுப் போன கள்ளமான குறிப்பானது, என் மிக்க துயரத்தைத் தீர்க்கும் ஒருமருந்தையும் உடையதாய் இருந்தது.

பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வது உடைத்து.
(1276)
விளக்கம்:

பெரிதாக அன்பைச் செய்து, விருப்பம் மிகுதியாகுமாறு கலத்தல், அரிதான பிரிவைச் செய்து, அன்பில்லாமல் விட்டுப் பிரியும்உட்கருத்தையும் உடையதாகும்.

தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை.
(1277)
விளக்கம்:

குளிர்ந்த நீர்த்துறைக்கு உரியவனான நம் காதலன் நம்மைப் பிரிந்ததனை, நம்மைக் காட்டிலும் நம் கைவளையல்கள்முன்னதாகவே உணர்ந்து தாமும் கழன்றனவே.

நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.
(1278)
விளக்கம்:

நேற்றுத்தான் எம் காதலர் எம்மைப் பிரிந்து சென்றனர். யாமும், அவரைப் பிரிந்து ஏழு நாட்கள் ஆகியவரைப் போல மேனி பசலைபடர்ந்தவராய் இருக்கின்றோமே.

தொடிநோக்கி மென்றோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண்டு அவள்செய் தது.
(1279)
விளக்கம்:

தன் தோள்வளைகளை நோக்கி, மென்மையான தோள்களையும் நோக்கி, தன் அடிகளையும் நோக்கி, அவள் செய்த குறிப்புஉடன்போக்கு என்பதே ஆகும்.

பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.
(1280)
விளக்கம்:

கண்ணினால் காம நோயைத் தெரிவித்துப் பிரியாமல் இருக்கும்படி இரத்தல், பெண்தன்மைக்கு, மேலும் சிறந்த பெண்தன்மைஉடையது என்று சொல்லுவர்.

127. அவர்வயின் விதும்பல்

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.
(1261)
விளக்கம்:

அவர் வருவாரென வழியையே பார்த்துக் கண்களின் ஒளியும் கெட்டன. அவர் பிரிந்த நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டுவிரல்களும் தேய்ந்து போயின.


இலங்கிழாய் இன்று மறப்பினென் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.
(1262)
விளக்கம்:

தோழி, அவரைப் பிரிந்து வருந்தியிருக்கும் இன்றைக்கும், அவரை மறந்தால், என் தோள்கள் அழகு கெட்டு மெலியும். என் தோள்அணிகளும் கழலும்படி நேர்ந்துவிடும்.

உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.
(1263)
விளக்கம்:

வெற்றியை விரும்பி, ஊக்கமே துணையாக, வேற்று நாட்டிற்குச் சென்றுள்ள காதலர் திரும்பி வருதலைக் காண்பதற்கு விரும்பியேஇன்னும் உயிரோடுள்ளேன்.

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகோ டேறும்என் நெஞ்சு.
(1264)
விளக்கம்:

முன்னர்க் கூடியிருந்த காம இன்பத்தையும் மறந்து, பிரிந்து போனவரின் வரவை நினைத்து, என் நெஞ்சம் மரக்கிளை தோறும் ஏறிஏறிப் பார்க்கின்றதே.

காண்கமற் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்குமென் மென்றோள் பசப்பு.
(1265)
விளக்கம்:

என் காதலனைக் கண்ணாரக் காண்பேனாக. அவ்வாறு கண்டபின் என் மெல்லிய தோள்களில் உண்டாகியுள்ள பசலை நோயும்தானாகவே நீங்கிப் போய்விடும்.

வருகமற் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.
(1266)
விளக்கம்:

என் காதலன் ஒருநாள் மட்டும் என்னிடம் வருவானாக. வந்தால், என் துன்ப நோய் எல்லாம் தீரும்படியாக அவனோடு இன்பத்தைநானும் பருகுவேன்.

வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.
(1267)
விளக்கம்:

வேந்தன் இவ் வினையிலே தானும் கலந்து வெற்றி அடைவானாக. யானும் என் மனைக்கண் சென்று சேர்ந்து, மாலைப பொழுதில்அவளோடு விருந்தை அனுபவிப்பேன்.

வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.
(1268)
விளக்கம்:

வேந்தன் இவ் வினையிலே தானும் கலந்து வெற்றி அடைவானாக. யானும் என் மனைக்கண் சென்று சேர்ந்து, மாலைப பொழுதில்அவளோடு விருந்தை அனுபவிப்பேன்.

ஒருநாள் எழுநாள்போல் செல்லும் சேட்சென்றார்
ருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.
(1269)
விளக்கம்:

தொலைவிடத்துக்குப் பிரிந்து சென்ற காதலர் வரும் நாளை மனத்தில் வைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் தானும் ஏழுநாள் போல்நெடியதாகக் கழியும்.

பெறினென்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.
(1270)
விளக்கம்:

பிரிவுத் துயரம் தாங்காமல் உள்ளம் உடைந்து அழிந்த போய்விட்டால் அவரைப் பெறுவதானால் என்ன? பெற்றால்தான் என்ன?அவரோடு பொருந்தினால்தான் என்ன?

126. நிறையழிதல்

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.
(1251)
விளக்கம்:

நாணம் என்னும் தாழ் பொருந்திய நிறை என்னும் கதவினைக் காமம் ஆகிய கோடறியானது உடைத்துத் தகர்த்து விடுகின்றது.


காமம் எனஒன்றே கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்.
(1252)
விளக்கம்:

காமம் என்று சொல்லப்படும் ஒன்று கொஞ்சமேனும் கண்ணோட்டமே இல்லாதது. அது என் நெஞ்சத்தை இரவிலும் ஏவல் செய்துஆள்கின்றது.

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.
(1253)
விளக்கம்:

யான் காமநோயை என்னுள்ளேயே மறைக்க முயல்வேன். ஆனால் அதுவோ என் குறிப்பின்படி மறையாமல், தும்மல் போலத்தானே புறத்து வெளிப்பட்டு விடும்.

நிறையுடையேன் என்பேன்மன் யானோ என்காமம்
மறையிறந்து மன்று படும்.
(1254)
விளக்கம்:

இதுவரை நிறையோடு இருப்பதாகவே நினைத்திருந்தேன். ஆனால் என் காமம் என்னுள் மறைந்திருந்த எல்லையைக் கடந்துமன்றத்தில் வெளிப்படுகின்றதே.

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று.
(1255)
விளக்கம்:

தம்மை வெறுப்பவர் பின்னே அவர் அன்பை வேண்டிச் செல்லாத பெருந்தகைமை, காமநோய் உற்றவர் அறியும் ஒரு தன்மையேஅன்று.

செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தாரோ
எற்றென்னை உற்ற துயர்.
(1256)
விளக்கம்:

வெறுத்துக் கைவிட்ட காதலரின் பின் செல்லுதலை விரும்பிய நிலையிலேயே இருப்பதனால், என்னை அடைந்த இக்காமநோயானது எத்தன்மை உடையதோ.

நாணென ஒன்றோ அறியலம் காமத்தாற்
பேணியார் பெட்பச் செயின்.
(1257)
விளக்கம்:

நாம் விரும்பிய காதலரும் காமத்தால் நமக்கு வேண்டியவற்றைச் செய்தாரானால், நாமும் நாணம் என்று குறிக்கப்படும் ஒன்றையும்அறியாதேயே இருப்போம்.

பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம்
பெண்மை யுடைக்கும் படை.
(1258)
விளக்கம்:

பல மாயங்களையும் அறிந்த கள்வனாகிய காதலனின் பணிவான சொற்கள் அல்லவோ, அன்று நம் பெண்மை என்னும் அரணைஉடைக்கும் படையாய் இருந்தன.

புலம்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.
(1259)
விளக்கம்:

ஊடுவேன் என்று நினைத்துச் சென்றேன். ஆனால் என் நெஞ்சம் என்னை மறந்து அவரோடு சென்று கலந்து விடுவதைக் கண்டு,அவரைத் தழுவினேன்.

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்போம் எனல்.
(1260)
விளக்கம்:

தீயிலே கொழுப்பை இட்டாற்போல உருகும் நெஞ்சை உடையவரான மகளிருக்கு, இசைந்து ஊடி நிற்போம் என்று ஊடும்தன்மைதான் உண்டாகுமோ.

125. நெஞ்சொடு கிளத்தல்

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.
(1241)
விளக்கம்:

நெஞ்சமே! இந்தத் துன்பம் தரும் நோயினைத் தீர்க்கும் மருந்து ஏதாயினும் ஒன்றை நினைத்துப் பார்த்து, எனக்கு நீயாயானும்சொல்ல மாட்டாயோ?


காதல் அவரில ராகநீ நோவது
பேதைமை வாழிஎன் நெஞ்சு.
(1242)
விளக்கம்:

நெஞ்சமே! அவர்தாம் நம்மிடம் காதல் இல்லாதாவராக இருக்க, நீ மட்டுமே அவரை எப்போதும் நினைத்து நினைத்து வருந்துவதுபேதைமை ஆகும்.

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.
(1243)
விளக்கம்:

நெஞ்சமே! என்னுடன் இருந்தும் அவரையே நினைந்து வருந்துவது ஏன்? இத் துன்பநோயைச் செய்தவரிடம் நம்மேல் அன்புற்றுநினைக்கும் தன்மை இல்லையே.

கண்ணும் கொளச்சேரி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காண லுற்று.
(1244)
விளக்கம்:

நெஞ்சமே, நீ அவரிடம் போகும்போது இக் கண்களையும் அழைத்துப் போவாயாக. அவரைக் காணவேண்டும் என்று இவைஎன்னைப் பிடுங்கித் தின்கின்றன.

செற்றா ரெனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.
(1245)
விளக்கம்:

நெஞ்சமே, நாம் விரும்பி நாடினாலும் நம்மை நாடாத அவர், நம்மை வெறுத்து விட்டார் என்று நினைத்து அவரைக் கைவிடநம்மால் முடியுமோ?

கலந்துணர்த்துங் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு.
(1246)
விளக்கம்:

என் நெஞ்சமே, ஊடியபோது ஊடலுணர்த்திக் கூடுகின்றவரான காதலரைக் கண்டால், நீ பிணங்கி உணரமாட்டாய். பொய்யானசினம் கொண்டுதான் காய்கின்றாய்.

காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானே பொறேனில் விரண்டு.
(1247)
விளக்கம்:

நல்ல நெஞ்சமே, ஒன்று காமத்தை விட்டுவிடு அல்லது நாணத்தை விட்டுவிடு. இந்த இரண்டையும் சேர்த்துப் பொறுத்துக்கொண்டிருக்க என்னால் முடியாது.

பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதையென் நெஞ்சு.
(1248)
விளக்கம்:

என் நெஞ்சமே, நம் துன்பத்தை நினைந்து இரங்கிவந்து அவர் அன்பு செய்யவில்லை என்று ஏங்கி, பிரிந்த காதலரின் பின்னாகச்செல்கின்றாயே, நீ பேதைமை உடையை.

உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.
(1249)
விளக்கம்:

என் நெஞ்சமே, காதலர் நம் உள்ளத்துள்ளேயே இருக்கும்போது, நீ அவரை நினைத்து யாரிடத்திலே போய்த் தேடிச்செல்கின்றாயோ?

துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்.
(1250)
விளக்கம்:

நம்மோடு சேர்ந்திருக்காமல் நம்மைப் பிரிந்து சென்றவரை நம் நெஞ்சத்திலேயே உடையவராய் நாம் இருக்கும்போதும், இன்னும் நாம் அழகிழந்து வருகின்றோமே.

124. உறுப்புநலன் அழிதல்

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின காண்.
(1231)
விளக்கம்:

இந்தத் துன்பத்தை நமக்கு விட்டுவிட்டுத் தொலைவாகச் சென்று விட்ட காதலரை நினைத்து அழுவதனாலே, என் கண்கள், தம்அழகிழந்து நறுமலர்களுக்கு நாணின.


நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.
(1232)
விளக்கம்:

பசலை நிறத்தைப்பெற்று நீரைச் சொரியும் கண்கள், தம்மை முன்பு விரும்பிய நம் காதலர், இப்போது அன்பு செய்யாததைப்பிறருக்கும் சொல்வன போல் உள்ளனவே.

தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.
(1233)
விளக்கம்:

காதலரோடு கூடியிருந்த நாள்களிலே பூரித்திருந்த தோள்கள் மெலிவடைந்து, அவருடைய பிரிவைப் பிறருக்கு நன்றாகத்தெரிவிப்பவை போல் உள்ளனவே.

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.
(1234)
விளக்கம்:

தமக்குத் துணையான காதலரைப் பிரிந்ததால், தம் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், தம் பசிய தொடிகளையும் கழலச்செயகின்றனவே.

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.
(1235)
விளக்கம்:

தொடிகளும் கழன்று வீழ, தம் பழைய அழகும் கெட்டுப் போன தோள்கள், நம் துன்பத்தை அறியாத கொடியவரின் கொடுமையைஊரறிய சொல்கின்றனவே.

தொடியோடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.
(1236)
விளக்கம்:

தொடிகள் கழன்று வீழ்ந்து, தோள்களும் மெலிந்ததனால், காண்பவர் மனம் நொந்தவராக, அவரைக் கொடியவர் என்றுகூறக்கேட்டு, யானும் வருந்துவேனே.

பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோள் பூசல் உரைத்து.
(1237)
விளக்கம்:

நெஞ்சமே! கொடியவராகிவிட்ட காதலருக்கு என் வாடிய தோள்களின் ஆரவாரத்தை எடுத்துச் சொல்லி உதவியைச்செய்ததனனால் நீயும் பெருமை அடையாயோ.

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.
(1238)
விளக்கம்:

தழுவிய கைகளைத் தளர்த்திய அப்பொழுதிலேயே, பசிய தொடியணிந்த இப் பேதைமை உடையவளின் நெற்றியும் பசலைநிறத்தை அடைந்து விட்டதே.

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.
(1239)
விளக்கம்:

முயக்கத்திற்கு இடையே குளிர்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிதான மழை போன்ற கண்களும் அழகிழந்து பசலை நிறம்அடைந்து விட்டனவே.

கண்ணின் பசப்போ பருவால் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.
(1240)
விளக்கம்:

காதலியின் ஒளியுள்ள நெற்றி பசலை நிறம் அடைந்ததைக் கண்டு, அவளுடைய கண்களின் பசலை நிறமும் மேலும் பெருதுன்பம்அடைந்துவிட்டது.

123. பொழுதுகண்டு இரங்கல்

மாலையோ அல்ல மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.
(1221)
விளக்கம்:

பொழுதே, நீ மாலைக் காலமே அல்ல. காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிவால் கலங்கியிருக்கும் மகளிரின் உயிரையுண்ணும்முடிவுக் காலமே ஆவாய்.


புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.
(1222)
விளக்கம்:

மயங்கிய மாலைப் பொழுதே, எம்மைப்போலவே நீயும் துன்பமுற்று தோன்றுகிறாய். நின் துணையும் என் காதலரைப் போலவேஇரக்கம் இல்லாதவரோ?

பனியரும்பிப் பைதல்கொள் மாலை துனியரும்பித்
துன்பம் வளர வரும்.
(1223)
விளக்கம்:

பனி தோன்றிப் பசந்துவந்த மாலைக் காலமானது, எனக்கு வருத்தம் தோன்றி மென்மேலும் வளரும்படியாகவே இப்போதுவருகின்றது போலும்.

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.
(1224)
விளக்கம்:

காதலர் அருகே இல்லாதபோது கொலை செய்யும் இடத்தில் ஆறலைப்பார் வருவதைப்போல், இம் மாலையும் என் உயிரைக்கொல்வதற்காகவே வருகின்றதே.

காலைக்குச் செய்தநன் றென்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை.
(1225)
விளக்கம்:

காலைப் பொழுதுக்கு யான் செய்த நன்மைதான் யாது? என்னை இப்படிப் பெரிதும் வருத்துகின்ற மாலைப் பொழுதுக்கு யான்செய்த தீமையும் யாதோ?

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்தது இலேன்.
(1226)
விளக்கம்:

மாலைப்பொழுது இவ்வாறு துன்பம் செய்யும் என்பதை காதலர் என்னைவிட்டுப் பிரியாமல் கூடியிருந்த அந்தக் காலத்தில் யான்அறியவே இல்லையே.

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்.
(1227)
விளக்கம்:

காலையில் அரும்பாகித் தோன்றி, பகலெல்லாம் பேரரும்பாக வளர்ந்து மாலைப்பொழுதிலே மலர்ந்து மலராக விரிகின்றதே,இந்தக் காலமாகிய நோய்.

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.
(1228)
விளக்கம்:

நெருப்பைப் போலச் சுடுகின்ற மாலைப் பொழுதுக்குத் தூதாகி, ஆயனுடைய புல்லாங்குழலின் இசையும், என்னைக் கொல்லும்படையாக வருகின்றதே.

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.
(1229)
விளக்கம்:

அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படர்கின்ற இப்பொழுதிலே இந்த ஊரும் மயங்கியதாய் என்னைப் போலத்துன்பத்தை அடையும்.

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.
(1230)
விளக்கம்:

பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைத்து, பிரிவுத் துன்பத்தாலே போகமால் நின்ற என் உயிரானது இம் மாலைப்பொழுதிலே நலிவுற்று மாய்கின்றதே.

122. கனவுநிலை உரைத்தல்

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.
(1211)
விளக்கம்:

பிரிவால் வருந்திய நான் அயர்ந்து கண் உறங்கியபோது, காதலர் அனுப்பிய தூதொடும் வந்த கனவுக்கு, யான் விருந்தாக என்னகைம்மாறு செய்யப் போகிறேன்.


கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.
(1212)
விளக்கம்:

யான் விரும்பும் போது என் கண்கள் தூங்குமானால், கனவில் வந்து தோன்றும் காதலருக்கு, யான் தப்பிப் பிழைத்திருக்கும்உண்மையைச் செய்வேன்.

நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.
(1213)
விளக்கம்:

நனவிலே வந்து நமக்கு அன்பு செய்யாதிருக்கின்ற காதலரை, கனவிலாவது கண்டு மகிழ்வதனால்தான், என் உயிரும் இன்னமும்போகாமல் இருக்கின்றது.

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.
(1214)
விளக்கம்:

நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடிக்கொண்டு வருவதற்காகவே, அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் கனவில் வந்துநமக்குத் தோன்றுகின்றன.

நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.
(1215)
விளக்கம்:

முன்பு நனவில் கண்ட இன்பமும், அந்தப் பொழுதளவிலேயே இனிதாயிருந்தது; இப்பொழுது காணும் கனவும், காணும் அந்தப்பொழுதிலே நமக்கு இனிதாகவே உள்ளது.

நனவென ஒன்றில்லை யாயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.
(1216)
விளக்கம்:

நனவு என்று சொல்லப்படும் ஒன்று இல்லையானால், கனவில் வருகின்ற நம் காதலர் நம்மை விட்டு எப்போதுமே பிரியாதிருப்பார்அல்லவோ.

நனவினால் நல்காக் கொடியார் கனவினான்
என்னெம்மைப் பீழிப் பது.
(1217)
விளக்கம்:

நனவில் வந்து நமக்கு அன்பு செய்வதற்கு அன்பு செய்வதற்கு நினையாத கொடுமையாளரான காதலர், கனவிலே வந்து மட்டும்நம்மை வருத்துவதுதான் எதனாலோ?

துஞ்சுங்கால் தோள்மேல ராகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.
(1218)
விளக்கம்:

தூங்கும்போது கனவிலே என் தோள் மேலராகக் காதலர் வந்திருப்பார்; விழித்து எழும்போதோ, விரைவாக என் நெஞ்சில்உள்ளவராக இருப்பார்.

நனவினால் நல்காரை நோவார் கனவினாற்
காதலர்க் காணா தவர்.
(1219)
விளக்கம்:

கனவிலே காதலரை வரக் காணாத மகளிரே, நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் குறித்து வருத்தப்பட்டு, மனம் நொந்துகொள்வார்கள்.

நனவினால் நந்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.
(1220)
விளக்கம்:

'நனவிலே நம்மை விட்டுப் பிரிந்து போனார் ' என்று அவரைப் பற்றி இவ்வூரார் பழித்துப் பேசுகின்றார்களே! இவர்கள் எம்போல்கனவில் தம் காதலரைக் காண்பதில்லையோ ?

121. நினைந்தவர் புலம்பல்

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.
(1201)
விளக்கம்:

நினைத்தாலும் தீராத பெருமகிழ்ச்சியை எமக்குச் செய்வதனால், உண்டால் மட்டுமே மகிழ்ச்சி தரும் கள்ளினும் காமமே உலகத்தில்இனிமை தருவதாகும்.


எனைத்தொன்று இனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று இல்.
(1202)
விளக்கம்:

யாம் விரும்புகின்ற காதலரை நினைத்தாலும், பிரிவுத் துன்பம் இல்லாமல் போகின்றது; அதனால், காமமும் எவ்வளவானாலும்ஒரு வகையில் இனிமையானதே.

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.
(1203)
விளக்கம்:

தும்மல் எழுவதுபோலத் தோன்றி எழாமல் அடங்குகின்றதே. அதனால், நம் காதலர் நினைப்பவர் போலிருந்தவர் நம்மை மறந்துநினையாமற் போயினாரோ.

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.
(1204)
விளக்கம்:

எம் நெஞ்சில் காதலராகிய அவர் எப்போதுமே உள்ளனர்; அது போலவே அவருடைய நெஞ்சில், நாமும் நீங்காமல் எப்போதும்நிறைந்திருக்கின்றோமோ?

தந்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எந்நெஞ்சத் தோவா வரல் .
(1205)
விளக்கம்:

தம்முடைய நெஞ்சில் எம்மை வர விடாமல் காவல் செய்து கொண்ட நம் காதலர், நம் உள்ளத்தில் தாம் ஓயாமல் வருவதைப்பற்றிவெட்கப்பட மாட்டாரோ?

மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
உற்றநாள் உள்ள உளேன்.
(1206)
விளக்கம்:

காதலரொடு இன்பமாயிருந்த அந்த நாட்களின் நினைவால்தான் நான் உயிரோடிருக்கிறேன்; வேறு எதனால்தான் நான் அவரைப்பிரிந்தும் உயிர் வாழ்கின்றேன்?

மறப்பின் எவனாவன் மற்கொல் மறிப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.
(1207)
விளக்கம்:

அவரை மறந்தால் என்ன ஆவேனோ? அதனால், அவரை மறப்பதற்கும் அறியேன்; மறக்க நினைத்தால் அந்த நினைவும் என்உள்ளத்தைச் சுடுகின்றதே

எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.
(1208)
விளக்கம்:

காதலரை எவ்வளவு அதிகமாக நினைத்தாலும், அவர் என் மேல் சினந்து கொள்ளவே மாட்டார்; நம் காதலர் நமக்குச் செய்யும்சிறந்த உதவியே அதுதான்.

விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.
(1209)
விளக்கம்:

'நாம் இருவரும் வேறானவர் அல்லேம்' என்று சொல்லும் அவர், இப்போது அன்பில்லாமல் இருப்பதை மிகவும் நினைந்து, என்இனிய உயிரும் அழிகின்றதே.

விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.
(1210)
விளக்கம்:

மதியமே! என் உள்ளத்தில் பிரியாதிருந்து, என்னைப் பிரிந்து சென்ற காதலார என் கண்ணால் தேடிக் காண்பதற்காக, நீயும்வானத்தில் மறையாமல் இருப்பாயாக.

120. தனிப்படர் மிகுதி

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.
(1191)
விளக்கம்:

தாம் விரும்பும் காதலர் தம்மையும் விரும்பும் பேறு பெற்றவர்கள், காதல் வாழ்லின் பயனாகிய விதையற்ற கனியை நுகரப்பெற்றவர்கள் ஆவார்.


வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி.
(1192)
விளக்கம்:

தம்மை விரும்புபவருக்கு, அவரை விரும்புகிற காதலர் அளிக்கும் அன்பானது, உயிர் வாழ்பவர்க்கு, வானம் மழை பெய்துஉதவினாற் போன்றதாகும்.

வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னுஞ் செருக்கு.
(1193)
விளக்கம்:

காதலரால் விரும்பப் படுகிறவருக்கு, இடையில் பிரிவுத் துன்பம் வந்தாலும், 'மீண்டும் யாம் இன்பமாக வாழ்வோம்' என்னும்செருக்குப் பொருந்துவது ஆகும்.

வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வீர்
வீழப் படாஅர் எனின்.
(1194)
விளக்கம்:

தாம் காதலிக்கின்ற காதலரால் தாமும் விரும்பப் படும் தன்மையைப் பெறாதவர் என்றால், அம்மகளிர், முன் செய்த நல் வினைப்பயனை உடையவரே அல்லர்.

நாங்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாங்காதல் கொள்ளாக் கடை.
(1195)
விளக்கம்:

நாம் காதல் கொண்டவர், நம்மீது தாமும் காதல் கொள்ளாவிட்டால், நமக்கு என்ன நன்மையைத்தான் செய்யப் போகின்றார்.

ஒருதலையான் இன்னாது காமம் காப்போல
இருதலை யானும் இனிது.
(1196)
விளக்கம்:

காதல் ஒருதலையானது என்றால் மிகவும் துன்பமானது; காவடித்தண்டின் பாரத்தைப் போல இரு பக்கமும் ஒத்தபடிஇருந்ததானால் , அதுவே மிக இனிமையானது.

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகுவான்.
(1197)
விளக்கம்:

இருவரிடத்திலும் ஒத்து நடக்காமல் ஒருவரிடம் மட்டுமே காமன் நின்று நடப்பதால், என் வருத்தத்தையும் துன்பத்தையும் அவன்காண மாட்டானோ?

வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணா இல்.
(1198)
விளக்கம்:

தாம் விரும்பிய காதலரின் இனிய சொல்லைப் பெறாமல், உலகத்தில் துன்புற்று வாழ்கின்ற பெண்களை விட வன்கண்மைஉடையவர்கள் யாரும் இல்லை.

நசை இயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு.
(1199)
விளக்கம்:

யான் விரும்பிய காதலர் மீண்டும் வந்து அன்பு செய்யார் என்றாலும், அவரைப்பற்றிய புகழைப் பிறர் சொல்லக் கேட்பதும்,காதுகளுக்கு இனிமையாக இருக்கின்றது.

உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.
(1200)
விளக்கம்:

நெஞ்சமே ! நின்னிடம் அன்பற்றவர்க்கு நின் நோயைச் சென்று செல்லுகிறாயே; அதைவிட எளிதாகக் கடலைத் தூர்ப்பதற்கு நீயும்முயல்வாயாக.

119. பசப்புறு பருவரல்

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற.
(1181)
விளக்கம்:

என்னை விரும்பிய காதலரின் பிரிவுக்கு அந்நாளிலே உடன்பட்ட யான், இப்பொழுது பசந்த என் இயல்பை யாருக்குச் சென்றுஎடுத்துச் சொல்வேன்.


அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.
(1182)
விளக்கம்:

அவர் தந்தார் என்னும் உரிமையினாலே, இப் பசப்புத் தானும் என் உடலின் மேல் உரிமையோடு பற்றிப் படர்ந்து மேனி எங்கும்நிறைகின்றதே.

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.
(1183)
விளக்கம்:

என் அழகையும், நாணத்தையும் அவர் தம்மோடு எடுத்துக் கொண்டார். அதற்கு கைம்மாறாக காம நோயையும் பசலையையும்எனக்கு தந்துள்ளார்.

உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர் திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.
(1184)
விளக்கம்:

அவரையே யான் நினைத்திருப்பேன்; அவர் திறங்களைப் பற்றியே பேசுவேன்; அவ்வாறாகவும், பசலையும் வந்து படர்ந்ததுதான்பெரிய வஞ்சனையாய் இருக்கின்றது.

உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது.
(1185)
விளக்கம்:

அதோ பார் என் காதலர் என்னை பிரிந்து போகின்றார் ; இதோ பார், அதற்குள்ளேயே என் உடலில் பசலையானது பற்றிபடருகின்றது.

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.
(1186)
விளக்கம்:

விளக்கின் முடிவை எதிர்பார்த்துத் தான் வரக்காத்திருக்கும் இருளைப் போல, என் தலைவனுடைய தழுவலின் முடிவைப்பசலையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது.

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.
(1187)
விளக்கம்:

தலைவனை தழுவிய படியே கிடந்தேன் ; பக்கத்தில் சிறிது புரண்டேன் ; அந்தப் பிரிவுக்கே பசலையும் அள்ளிக்கொள்வது போல,என்மீது மிகுதியாக பரவி விட்டதே.

பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.
(1188)
விளக்கம்:

இவள் பசந்தாள் ' என்று என்னைப் பழித்து பேசுவது அல்லாமல், இவளைக் காதலர் விட்டு பிரிந்தார் என்று பேசுபவர் யாரும்இல்லையே.

பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.
(1189)
விளக்கம்:

'பிரிவுக்கு உடன்படச்செய்த காதலர், நல்ல நிலையினர் ஆவார்' என்றால், என்னுடைய மேனியும் உள்ள படியே பசலை நோயினைஅடைவதாக.

பசப்பெனப் பேர் பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்.
(1190)
விளக்கம்:

'பிரிவுக்கு உடன்படச் செய்து பிரிந்து போனவர், நமக்கு அருள் செய்யாதது பற்றித் தூற்றார் ' என்றால், யான் பசந்தேன் என்று பேர்பெறுவதும் நல்லதேயாகும்.

118. கண் விதுப்பு அழிதல்

கண்டாங் கலுழ்வ தென்கொலோ தண்டாநோய்
தாங்காட்ட யான்கண் டது.
(1171)
விளக்கம்:

இக்கண்கள் அவரைக் காட்டியதால் அல்லவோ நீங்காத இக்காமநோயை யாமும் பெற்றோம்; அவை, இன்று என்னிடம் காட்டச் சொல்லி அழுவது எதனாலோ?


தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன் ?
(1172)
விளக்கம்:

மேல் விளைவு பற்றி ஆராயாமல், அன்று அவரை நோக்கி மகிழ்ந்த கண்கள்,இன்று, என் துயரைப் பகுத்துணராமல், தாமும் துன்பப் படுவது எதனாலோ?

கதுமெனத் தாம்நோக்கித் தாமே கழலும்
இதுநகத் தக்கது உடைத்து.
(1173)
விளக்கம்:

அன்று தாமே விரைந்து பார்த்தும், இன்று தாமே அழுகின்ற கண்கள், தம்மால் அதன் அறியாமை கருதிச் சிரிக்கத் தகுந்த இயல்பினை உடையதாகும்.

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உல்வில்நோய் என்கண் நிறுத்து.
(1174)
விளக்கம்:

அன்று யான் உய்யாத அளவு தீராத காம நோயை என்னிடம் நிறுத்திய கண்கள், இன்று, தாமும் அழுவதற்கு மாட்டாதபடி நீர் வற்றி வறண்டு விட்டனவே.

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றா
காமநோய் செய்தஎன் கண்.
(1175)
விளக்கம்:

அன்று யான் கடலிலும் பெரிதான காம நோயை அன்று எனக்குச் செய்த இக்கண்கள், அத் தீவினையால், தாமும் உறங்காமல் இவ்விரவுப் பொழுதில் துன்பத்தை அடைகின்றன.

ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.
(1176)
விளக்கம்:

எனக்கு இத்தகைய காமநோயைச் செய்த என் கண்கள், தாமும் துயில் பெறாமல் இப்படி அழுகையில் ஈடுபட்டது காண்பதற்கு மிகவும் இனியதாகும்.

உழந்துழந்து உண்ணீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி யவர்க்கண்ட கண்.
(1177)
விளக்கம்:

விரும்பி உள் நெகிழ்ந்து விடாதே, அன்று அவரைக் கண்டு மகிழ்ந்த கண்கள், இன்று துயிலாது வருந்தி வருந்தித் தம்மிடமுள்ள நீரும் அற்றே போவதாக!

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.
(1178)
விளக்கம்:

உள்ளத்தில் விருப்பமில்லாமல், பேச்சால் அன்பு காட்டியவர் இவ்விடத்தே உள்ளனர். அதனால் பயன் என்ன? அவரைக் காணாமல் என் கண்கள் அமைகின்றிலவே.

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.
(1179)
விளக்கம்:

காதலர் வந்த போது, அவர் வரவை எதிர்பார்த்துத் தூங்கா; வந்த போது, பிரிவஞ்சித் துயிலா; இருவழியும் கண்கள் பொறுத்தற்கரிய துன்பத்தையே அடைந்தன.

மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணா ரகத்து.
(1180)
விளக்கம்:

எம்மைப் போல் அறைபறையாகிய கண்களை உடையவரின்,நெஞ்சில் அடக்கியுள்ள மறையை அறிதல் , அவ்வூரிலே உள்ளவர்க்கு மிகவும் எளியதாகும்.

117. படர்மெலிந்து இரங்கல்

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.
(1161)
விளக்கம்:

பிரிவுத்துன்பமான இந்த நோயை பிறர் அறியாதபடி மறைப்பேன். ஆனால் அஃது ஊற்று நீரைப் போல மென்மேலும் சுரந்து சுரந்து பெருகுகின்றதே.


சுரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்.
(1162)
விளக்கம்:

காமநோயை ணிழுவதும் மூடி மறைக்கவும் ணிடியவில்லை, நோயைச் செய்த காதலருக்குத் தூது அனுப்புவதும் என் பெண்மைக்கு நாணம் தருகின்றதே.

காமணிம் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.
(1163)
விளக்கம்:

பிரிவுத் துயராலே நலியும் என் உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு காமணிம் நாணணிம் இருபாலும் சம எடையாகத் தூங்குகின்றனவே.

காமக் கடன்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.
(1164)
விளக்கம்:

காமமாகிய நோயும் கடலைப் போல பெருகியுள்ளது. அதைக் கடக்கும் தோணியாகிய காதலர்தாம் இப்போது நம்மோடு உடன் இல்லாமல் போயினர்.

துப்பின் எவனாவர் மற்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.
(1165)
விளக்கம்:

இனிமையான நட்புடைய நம்மிடமே துன்பத்தைச் செய்யும் நம் காதலர், பகையை வெல்வதற்கான வலிமை வேண்டும்போது, என்னதான் செய்வாரோ?

இன்பம் கடன்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.
(1166)
விளக்கம்:

காம இன்பமானது அனுபவிக்கும்போது கடலளவு பெரிதாகியுள்ளது. ஆனால் பிரிவுத் துன்பத்தால் வருத்தும்போது அவ்வருத்தம் கடலை விடப் பெரிதாக உள்ளதே.

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.
(1167)
விளக்கம்:

காமமாகிய கடும்புனலை நீந்திநீந்திக் கரை காணாமல் தவிக்கின்றேன். இந்த நள்ளிரவிலும் யான் ஒருத்தியே தூங்காமல் வருந்தியபடி உள்ளேன்.

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை.
(1168)
விளக்கம்:

இந்த ராக்காலமும், எல்லா உயிர்களையும் உறங்கச் செய்துவிட்டு, என்னையன்றி யாரையும் இந் நள்ளிரவில் தனக்குத் துணையில்லாமல் உள்ளதே.

கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா.
(1169)
விளக்கம்:

பிரிவுத் துயராலே வருந்தும் போது மிக நீண்டது போலக் கழிகின்ற இரவுப் பொழுதானது, நம்மைப் பிரிந்து போன காதலரினும் மிகமிகக் கொடுமையானது.

உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.
(1170)
விளக்கம்:

என் உள்ளத்தைப் போலவே, உடலும் , அவர் இருக்கும் இடத்திற்கு இப்போதே செல்ல முடிந்ததானால், என் கண்கள் இப்படிக் கண்ணீர் வெள்ளத்தில் நீந்தாவே.

116. பிரிவாற்றாமை

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்லரவு வாழ்வார்க் குரை.
(1151)
விளக்கம்:

பிரிந்து செல்லாமை உண்டானால் எனக்குச் சொல்வாயாக; பிரிந்துபோய் விரைந்து திரும்பி வருவது பற்றியானால், அது வரையிலும் வழ்ந்திருப்பவருக்குச் சொல்வாயாக.


இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தாற் புணர்வு.
(1152)
விளக்கம்:

அவர் அன்பான பார்வையும் முன்னர் இனிதாய் இருந்தது; இப்பொழுதோ, பிரிவை நினெத்து அஞ்சுகின்ற துன்பத்தால், அவர் கூடுதலும் துன்பமாகத் தோன்றுகின்றது.

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.
(1153)
விளக்கம்:

அறிவு உடையவரிடமும், தாம் காதலித்தவரைப் "பிரிவது" ஒரு சமயத்தில் உள்ளதனால், அவர், பிரியேன் என்று சொன்ன சொல்லெயும் என்னால் நம்ப முடியவில்லெ.

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.
(1154)
விளக்கம்:

அருள் செய்த காலத்தில், "அஞ்சாதே" என்று கூறி என் அச்சத்தைப் போக்கியவரே, இப்போது விட்டுப்பிரிவாரானால், அவரை நம்பிய நமக்கும் குற்றம் ஆகுமோ.

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு.
(1155)
விளக்கம்:

என்னைக் காப்பதானால் காதலர் பிரியாதபடி தடுத்துக் காப்பாயாக. அவர் பிரிந்து போய்விட்டார் என்றால் மீண்டும் அவரைக் கூடுதல் என்பது நமக்கு அரிதாகும்.

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை.
(1156)
விளக்கம்:

'பிரிவைப் பற்றிச் சொல்லும் கொடியவர் அவரானால்', அவர் மீண்டும் திரும்பி வந்து நமக்கு இன்பம் தருவார் என்னஉம் நம் ஆசையும், பயன் இல்லாததே .

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறையிறவா நின்ற வளை
(1157)
விளக்கம்:

நம்மை தலைவன் பிரிந்து போயினான் என்பதை, மெலிந்த நம் முன் கையிலிருந்து சுழலும் வளைகள் ஊரறிய எடுத்துக் காட்டி தூற்ற மாட்டவோ?

இன்னா தினனில்லூர் வாழ்தல் அதனினும்
இன்னா தினியார்ப் பிரிவு .
(1158)
விளக்கம்:

தோழியர் எவருமே இல்லாத ஊரில் குடியிருப்பது மிகத் துன்பமானது, இனிய காதலரைப் பிரிந்து தனித்திருப்பது, அதை விட மிகவும் துன்பமானது.

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ
(1159)
விளக்கம்:

தீ தன்னைத் தொட்டால் தான் சுடும். ஆனால், தலைவன் தலைவி பிரிந்து எத்தனைத் தொலைவில் இருந்தாலும் சுடும் ஆற்றல் கொண்டது காமநோய்.

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்னிருந்து வாழ்வார் பலர்.
(1160)
விளக்கம்:

காதலர் பிரிவைப் பொறுத்து, அதனால் வரும் நலிவையும் விலக்கி, பிரிவுத் துயரையும் தாங்கி அதன் பின்னரும் உயிரோடு இருக்கும் மகளிர் உலகத்தில் பலர்.

115. அலர் அறிவுறுத்தல்

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனெப்
பலரறியார் பாக்கியத் தால்.
(1141)
விளக்கம்:

ஊரிலே பழிச்சொல் எழுந்தும் என் உயிர் இன்னும் போகாது நிற்கின்றது; அஃது என் நல்வினெயின் பயனால்தான் என்பதைப் பலரும் அறிய மாட்டார்கள்.


மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.
(1142)
விளக்கம்:

குவளெ மலரைப்போன்ற கண்களை உடையவளான இவளின் அருமையைப் பற்றி அறியாமல், இவளெ எளியவளாகக் கருதி, இவ்வூரவர் அலரினெத் தந்தார்களே

உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனெப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.
(1143)
விளக்கம்:

ஊர் அனைத்தும் அறிந்த இப் பழிச்சொற்கள் அவனெயும் சென்று சேராதோ. சேருமாதலால், அதனெப் பெறாதைப் பெற்றாற் போன்றதாகவே யானும் கொள்வேன்.

கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.
(1144)
விளக்கம்:

ஊரார் உரைக்கும் பழிச்சொற்களாலே காமநோயும் நன்றாக மலர்கின்றது. அதுவும் இல்லெயானால், என் ஆசையும் தன் மலர்ச்சியில்லாமல் சுருங்கிப் போய்விடுமே.

களித்தோறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படும் தோறும் இனிது.
(1145)
விளக்கம்:

களிக்குந்தோறும் களிக்குந்தோறும் மேன்மேலும் கள்ளுண்டலெ விரும்பினாற்போல, காமமும், அலரால் வெளிப்பட வெளிப்பட, மேலும் இனிமையாகின்றது.

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களெப் பாம்புகொண் டற்று.
(1146)
விளக்கம்:

அவரைக் கண்டது எல்லாம் ஒரே ஒரு நாள்தான்; திங்களெப் பாம்பு கொண்டது எங்கும் பரவினாற்போல, ஊரலரும் அதற்குள் எங்கும் வெளிப்பட்டுப் பரவிவிட்டதே.

ஊரவர் கெளவை எருவாக அன்னெசொல்
நீராக நீளுமிந் நோய்.
(1147)
விளக்கம்:

இக் காமநோயானது, ஊரவர் சொல்லும் பழிச்சொற்களெ எருவாகவும், அதுகேட்டு அன்னெ சொல்லும் கடுஞ்சொல்லெ நீராகவும் கொண்டு வளர்கின்றது.

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்.
(1148)
விளக்கம்:

பழிச்சொல்லால் காமத்தைத் தணித்துவிடுவோம் என்று முயலுதல் நெய்யால் நெருப்பை அவிப்போம் என்பது போன்ற அறியாமைச் செயலாகும்.

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.
(1149)
விளக்கம்:

"அஞ்சாதே, பிரியேன்" என்று என்னெத் தெளிவித்துக் கூடியவர், இந்நாள் பலரும் நாண நம்மைக் கைவிட்டுப் போனபோது, அலருக்கு நாணவும் நம்மால்இயலுமோ

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை யெடுக்கும் இவ்வூர்.
(1150)
விளக்கம்:

யாம் விரும்புகின்ற அலரினெ இவ்வூரவரும் எடுத்துக் கூறுகின்றனர்; அதனால், எம் காதலரும் தாம் எம் உறவை விரும்பி வந்து எமக்கு அருளினெச் செய்வார்.

114. நாணுத் துறவு உரைத்தல்

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லெ வலி.
(1131)
விளக்கம்:

காம நோயால் துன்புற்று, தம் காதலியின் அன்பைப் பெறாமல் வருந்தியவருக்கு வலிமையான பாதுகாப்பு, மடலேறுதல் அல்லாமல், வேறு யாதும் இல்லெ.


நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினெ நீக்கி நிறுத்து.
(1132)
விளக்கம்:

காதலியின் அன்பைப் பெறாத துயரத்தைத் தாங்கமுடியாத என் உடம்பும் உயிரும், நாணத்தை என்னிடமிருந்து நீக்கி நிறுத்திவிட்டு, மடலூரத் துணிந்துவிட்டன.

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.
(1133)
விளக்கம்:

நாணத்தையும் நல்ல ஆண்மையையும் முன்னர்ப் பெற்றிருந்தேன்; இப்பொழுதோ பிரிவுத் துயரால் காமநோய் மிகுந்தவர் ஏறும் மடலெயே பெற்றுள்ளேன்.

காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணெ.
(1134)
விளக்கம்:

நாணத்தோடு நல்லாண்மையும் ஆகிய தோணிகளெக் காமநோய் என்கின்ற கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போகின்றதே, என்ன செய்வேன்.

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.
(1135)
விளக்கம்:

தொடர்பான குறுவளையள்களை அணிந்த இவள்தான், மாலைப் பொழுதில் வருந்தும் துயரத்தையும், மடலேறும் நிலைமையையும் தந்துவிட்டாள்.

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படலொல்லா பேதைக்கென கண்.
(1136)
விளக்கம்:

அப்பேதையின் பொருட்டாக என் கண்கள் ஒருபோதும் மூடுதலெச் செய்யமாட்டா; அதனால், இரவின் நடுச்சாம வேளெயிலும் மடலேறுதலெயே நான் நினெத்திருப்பேன்.

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்ப்
பெண்ணின் பெருந்தக்கது இல்.
(1137)
விளக்கம்:

கடலெப் போன்ற காம நோயால் வருத்தமடைந்த போதும், மடலேறாமல், தன் துயரத்தைப் பொறுத்திருக்கும் பெண்ணெப் போன்ற பெருந்தகுதி ஆணுக்கு இல்லெ.

நிறையரியர் மன் அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.
(1138)
விளக்கம்:

நிறைஇல்லாதவர் இவர்' என்றும் 'இரங்கத்தவர் இவர்' என்றும் பாராது, காமநோயானது, மறைப்பைக் கடந்சு, மன்றத்தில் தானாக வெளிப்படுகின்றதே.

அறிகிலார் எல்லாரும் என்றே என்காமம்
மறுகின் மறுகும் மருண்டு.
(1139)
விளக்கம்:

பொறுத்திருந்ததனாலே எல்லாரும் அறிந்தாரில்ஸெ என்று நினெத்தே, என் காமநோயானது, இவ்வாறு தெருவிலே பலரும் அறியுமாறு மயங்கித் திரிகின்றது போலும்.

யாங்கண்ணிற் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு.
(1140)
விளக்கம்:

யாம் பட்ட இந்தப் பிரிவுத் துன்பத்தை அவர்களும் அடையாததாலேதான், அறிவில்லாதவர், யாம் கண்ணாற் காணும்படியாக எம் எதிரே நின்று சிரிக்கின்றனர்.

113. காதல் சிறப்பு உரைத்தல்

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர்.
(1121)
விளக்கம்:

பணிவோடு பேசுகின்ற இவளது, வெண்மையான பற்களிடையே ஊறிவந்த நீரானது, பாலோடு தேனும் கலந்தாற்போல மிகுந்த சுவையினெ உடையதாகும்.


உடம்பொடு உயிரிடை என்னமற் றன்னந
மடந்தையொடு எம்மிடை நட்பு
(1122)
விளக்கம்:

இம் மடந்தைக்கும் எமக்கும் இடையிலுள்ள நட்பினது நெருக்கம், உடம்போடு உயிருக்கும் இடையேயுள்ள நட்பினது நெருக்கம் போன்றது ஆகும்.

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லெ இடம்.
(1123)
விளக்கம்:

கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! நீயும் போய் விடுவாயாக! யாம் விரும்புகின்ற அழகிய நுதலெ உடையாளுக்கு இருப்பதற்கான இடம் வேறு இல்லெ.

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னன் நீங்கும் இடத்து.
(1124)
விளக்கம்:

இந்த ஆயிழையாள் என்னுடன் இருக்கும்போது, என் உயிருக்கு வாழ்வைத் தருகின்றாள்; நீங்கும் போதோ அவ்வுயிருக்குச் சாதலெயே தருகின்றாள்.

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.
(1125)
விளக்கம்:

ஒள்ளியவாய் அமர்த்த கண்களெ உடையவளின் குணங்களெ மறப்பதற்கே அறியேன்; அதனால், யான் அதை எப்போதாயினும் நினெப்பதும் செய்வேனோ !

கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார்
நுண்ணியர்எங் காத லவர்.
(1126)
விளக்கம்:

எம் காதலுக்கு உரியவர் எம் கண்களிலிருந்து ஒருபோதுமே நீங்கார்; எம் கண்களெ இமைத்தாலும் வருந்தார்; அவ்வளவு நுண்ணியவர் அவர்.

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக் கறிந்து.
(1127)
விளக்கம்:

காதலுக்கு உரியவரான அவர் என் கண்ணிலேயே உள்ளனர்; ஆதலினாலே, அவர் மறைவாரோ என்று நினெத்து, என் கண்களுக்கு நான் மையும் எழுத மாட்டேன்.

நெஞ்சத்து காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து.
(1128)
விளக்கம்:

காதலர் என் நெஞ்சத்தில் நிறைந்திருக்கிறார். அதனால் அவருக்குச் சூடு உண்டாவதை நினைத்து, யாம் சூடாக எதனையும் உண்பதற்கும் அஞ்சுவோம்.

இமைப்பிற் கரப்பாக்கு அறிவில் அனெத்திற்கே
ஏதிலர் என்னுமிவ் வூர்.
(1129)
விளக்கம்:

'இமைப்பின் அவர் மறைவார்' என்று, கண்களெ மூடாமலே துயிலொழித்துக் கிடப்போம்; அவ்வளவிற்கே, இவ்வூர் அவரை அன்பற்றவர் என்கின்றதே.

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னுமிவ் வூர்.
(1130)
விளக்கம்:

எம் உள்ளத்துள்ளே அவர் உவப்போடு உள்ளார்; இருந்தும், பிரிந்து போய்விட்டார்; அதனால் அன்பில்லாதவர் என்றும் இவ்வூர் அவர்மேல் பழி கூறுகின்றதே!