Sunday, May 31, 2009

127. அவர்வயின் விதும்பல்

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.
(1261)
விளக்கம்:

அவர் வருவாரென வழியையே பார்த்துக் கண்களின் ஒளியும் கெட்டன. அவர் பிரிந்த நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டுவிரல்களும் தேய்ந்து போயின.


இலங்கிழாய் இன்று மறப்பினென் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.
(1262)
விளக்கம்:

தோழி, அவரைப் பிரிந்து வருந்தியிருக்கும் இன்றைக்கும், அவரை மறந்தால், என் தோள்கள் அழகு கெட்டு மெலியும். என் தோள்அணிகளும் கழலும்படி நேர்ந்துவிடும்.

உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.
(1263)
விளக்கம்:

வெற்றியை விரும்பி, ஊக்கமே துணையாக, வேற்று நாட்டிற்குச் சென்றுள்ள காதலர் திரும்பி வருதலைக் காண்பதற்கு விரும்பியேஇன்னும் உயிரோடுள்ளேன்.

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகோ டேறும்என் நெஞ்சு.
(1264)
விளக்கம்:

முன்னர்க் கூடியிருந்த காம இன்பத்தையும் மறந்து, பிரிந்து போனவரின் வரவை நினைத்து, என் நெஞ்சம் மரக்கிளை தோறும் ஏறிஏறிப் பார்க்கின்றதே.

காண்கமற் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்குமென் மென்றோள் பசப்பு.
(1265)
விளக்கம்:

என் காதலனைக் கண்ணாரக் காண்பேனாக. அவ்வாறு கண்டபின் என் மெல்லிய தோள்களில் உண்டாகியுள்ள பசலை நோயும்தானாகவே நீங்கிப் போய்விடும்.

வருகமற் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.
(1266)
விளக்கம்:

என் காதலன் ஒருநாள் மட்டும் என்னிடம் வருவானாக. வந்தால், என் துன்ப நோய் எல்லாம் தீரும்படியாக அவனோடு இன்பத்தைநானும் பருகுவேன்.

வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.
(1267)
விளக்கம்:

வேந்தன் இவ் வினையிலே தானும் கலந்து வெற்றி அடைவானாக. யானும் என் மனைக்கண் சென்று சேர்ந்து, மாலைப பொழுதில்அவளோடு விருந்தை அனுபவிப்பேன்.

வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.
(1268)
விளக்கம்:

வேந்தன் இவ் வினையிலே தானும் கலந்து வெற்றி அடைவானாக. யானும் என் மனைக்கண் சென்று சேர்ந்து, மாலைப பொழுதில்அவளோடு விருந்தை அனுபவிப்பேன்.

ஒருநாள் எழுநாள்போல் செல்லும் சேட்சென்றார்
ருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.
(1269)
விளக்கம்:

தொலைவிடத்துக்குப் பிரிந்து சென்ற காதலர் வரும் நாளை மனத்தில் வைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் தானும் ஏழுநாள் போல்நெடியதாகக் கழியும்.

பெறினென்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.
(1270)
விளக்கம்:

பிரிவுத் துயரம் தாங்காமல் உள்ளம் உடைந்து அழிந்த போய்விட்டால் அவரைப் பெறுவதானால் என்ன? பெற்றால்தான் என்ன?அவரோடு பொருந்தினால்தான் என்ன?

No comments:

Post a Comment