தாங்காட்ட யான்கண் டது.
(1171)
விளக்கம்:இக்கண்கள் அவரைக் காட்டியதால் அல்லவோ நீங்காத இக்காமநோயை யாமும் பெற்றோம்; அவை, இன்று என்னிடம் காட்டச் சொல்லி அழுவது எதனாலோ?
தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன் ?
(1172)
விளக்கம்:மேல் விளைவு பற்றி ஆராயாமல், அன்று அவரை நோக்கி மகிழ்ந்த கண்கள்,இன்று, என் துயரைப் பகுத்துணராமல், தாமும் துன்பப் படுவது எதனாலோ?
கதுமெனத் தாம்நோக்கித் தாமே கழலும்
இதுநகத் தக்கது உடைத்து.
(1173)
விளக்கம்:அன்று தாமே விரைந்து பார்த்தும், இன்று தாமே அழுகின்ற கண்கள், தம்மால் அதன் அறியாமை கருதிச் சிரிக்கத் தகுந்த இயல்பினை உடையதாகும்.
பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உல்வில்நோய் என்கண் நிறுத்து.
(1174)
விளக்கம்:அன்று யான் உய்யாத அளவு தீராத காம நோயை என்னிடம் நிறுத்திய கண்கள், இன்று, தாமும் அழுவதற்கு மாட்டாதபடி நீர் வற்றி வறண்டு விட்டனவே.
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றா
காமநோய் செய்தஎன் கண்.
(1175)
விளக்கம்:அன்று யான் கடலிலும் பெரிதான காம நோயை அன்று எனக்குச் செய்த இக்கண்கள், அத் தீவினையால், தாமும் உறங்காமல் இவ்விரவுப் பொழுதில் துன்பத்தை அடைகின்றன.
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.
(1176)
விளக்கம்:எனக்கு இத்தகைய காமநோயைச் செய்த என் கண்கள், தாமும் துயில் பெறாமல் இப்படி அழுகையில் ஈடுபட்டது காண்பதற்கு மிகவும் இனியதாகும்.
உழந்துழந்து உண்ணீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி யவர்க்கண்ட கண்.
(1177)
விளக்கம்:விரும்பி உள் நெகிழ்ந்து விடாதே, அன்று அவரைக் கண்டு மகிழ்ந்த கண்கள், இன்று துயிலாது வருந்தி வருந்தித் தம்மிடமுள்ள நீரும் அற்றே போவதாக!
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.
(1178)
விளக்கம்:உள்ளத்தில் விருப்பமில்லாமல், பேச்சால் அன்பு காட்டியவர் இவ்விடத்தே உள்ளனர். அதனால் பயன் என்ன? அவரைக் காணாமல் என் கண்கள் அமைகின்றிலவே.
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.
(1179)
விளக்கம்:காதலர் வந்த போது, அவர் வரவை எதிர்பார்த்துத் தூங்கா; வந்த போது, பிரிவஞ்சித் துயிலா; இருவழியும் கண்கள் பொறுத்தற்கரிய துன்பத்தையே அடைந்தன.
மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணா ரகத்து.
(1180)
விளக்கம்:எம்மைப் போல் அறைபறையாகிய கண்களை உடையவரின்,நெஞ்சில் அடக்கியுள்ள மறையை அறிதல் , அவ்வூரிலே உள்ளவர்க்கு மிகவும் எளியதாகும்.
No comments:
Post a Comment