Sunday, May 31, 2009

117. படர்மெலிந்து இரங்கல்

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.
(1161)
விளக்கம்:

பிரிவுத்துன்பமான இந்த நோயை பிறர் அறியாதபடி மறைப்பேன். ஆனால் அஃது ஊற்று நீரைப் போல மென்மேலும் சுரந்து சுரந்து பெருகுகின்றதே.


சுரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்.
(1162)
விளக்கம்:

காமநோயை ணிழுவதும் மூடி மறைக்கவும் ணிடியவில்லை, நோயைச் செய்த காதலருக்குத் தூது அனுப்புவதும் என் பெண்மைக்கு நாணம் தருகின்றதே.

காமணிம் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.
(1163)
விளக்கம்:

பிரிவுத் துயராலே நலியும் என் உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு காமணிம் நாணணிம் இருபாலும் சம எடையாகத் தூங்குகின்றனவே.

காமக் கடன்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.
(1164)
விளக்கம்:

காமமாகிய நோயும் கடலைப் போல பெருகியுள்ளது. அதைக் கடக்கும் தோணியாகிய காதலர்தாம் இப்போது நம்மோடு உடன் இல்லாமல் போயினர்.

துப்பின் எவனாவர் மற்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.
(1165)
விளக்கம்:

இனிமையான நட்புடைய நம்மிடமே துன்பத்தைச் செய்யும் நம் காதலர், பகையை வெல்வதற்கான வலிமை வேண்டும்போது, என்னதான் செய்வாரோ?

இன்பம் கடன்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.
(1166)
விளக்கம்:

காம இன்பமானது அனுபவிக்கும்போது கடலளவு பெரிதாகியுள்ளது. ஆனால் பிரிவுத் துன்பத்தால் வருத்தும்போது அவ்வருத்தம் கடலை விடப் பெரிதாக உள்ளதே.

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.
(1167)
விளக்கம்:

காமமாகிய கடும்புனலை நீந்திநீந்திக் கரை காணாமல் தவிக்கின்றேன். இந்த நள்ளிரவிலும் யான் ஒருத்தியே தூங்காமல் வருந்தியபடி உள்ளேன்.

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை.
(1168)
விளக்கம்:

இந்த ராக்காலமும், எல்லா உயிர்களையும் உறங்கச் செய்துவிட்டு, என்னையன்றி யாரையும் இந் நள்ளிரவில் தனக்குத் துணையில்லாமல் உள்ளதே.

கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா.
(1169)
விளக்கம்:

பிரிவுத் துயராலே வருந்தும் போது மிக நீண்டது போலக் கழிகின்ற இரவுப் பொழுதானது, நம்மைப் பிரிந்து போன காதலரினும் மிகமிகக் கொடுமையானது.

உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.
(1170)
விளக்கம்:

என் உள்ளத்தைப் போலவே, உடலும் , அவர் இருக்கும் இடத்திற்கு இப்போதே செல்ல முடிந்ததானால், என் கண்கள் இப்படிக் கண்ணீர் வெள்ளத்தில் நீந்தாவே.

No comments:

Post a Comment