Sunday, May 31, 2009

114. நாணுத் துறவு உரைத்தல்

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லெ வலி.
(1131)
விளக்கம்:

காம நோயால் துன்புற்று, தம் காதலியின் அன்பைப் பெறாமல் வருந்தியவருக்கு வலிமையான பாதுகாப்பு, மடலேறுதல் அல்லாமல், வேறு யாதும் இல்லெ.


நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினெ நீக்கி நிறுத்து.
(1132)
விளக்கம்:

காதலியின் அன்பைப் பெறாத துயரத்தைத் தாங்கமுடியாத என் உடம்பும் உயிரும், நாணத்தை என்னிடமிருந்து நீக்கி நிறுத்திவிட்டு, மடலூரத் துணிந்துவிட்டன.

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.
(1133)
விளக்கம்:

நாணத்தையும் நல்ல ஆண்மையையும் முன்னர்ப் பெற்றிருந்தேன்; இப்பொழுதோ பிரிவுத் துயரால் காமநோய் மிகுந்தவர் ஏறும் மடலெயே பெற்றுள்ளேன்.

காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணெ.
(1134)
விளக்கம்:

நாணத்தோடு நல்லாண்மையும் ஆகிய தோணிகளெக் காமநோய் என்கின்ற கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போகின்றதே, என்ன செய்வேன்.

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.
(1135)
விளக்கம்:

தொடர்பான குறுவளையள்களை அணிந்த இவள்தான், மாலைப் பொழுதில் வருந்தும் துயரத்தையும், மடலேறும் நிலைமையையும் தந்துவிட்டாள்.

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படலொல்லா பேதைக்கென கண்.
(1136)
விளக்கம்:

அப்பேதையின் பொருட்டாக என் கண்கள் ஒருபோதும் மூடுதலெச் செய்யமாட்டா; அதனால், இரவின் நடுச்சாம வேளெயிலும் மடலேறுதலெயே நான் நினெத்திருப்பேன்.

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்ப்
பெண்ணின் பெருந்தக்கது இல்.
(1137)
விளக்கம்:

கடலெப் போன்ற காம நோயால் வருத்தமடைந்த போதும், மடலேறாமல், தன் துயரத்தைப் பொறுத்திருக்கும் பெண்ணெப் போன்ற பெருந்தகுதி ஆணுக்கு இல்லெ.

நிறையரியர் மன் அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.
(1138)
விளக்கம்:

நிறைஇல்லாதவர் இவர்' என்றும் 'இரங்கத்தவர் இவர்' என்றும் பாராது, காமநோயானது, மறைப்பைக் கடந்சு, மன்றத்தில் தானாக வெளிப்படுகின்றதே.

அறிகிலார் எல்லாரும் என்றே என்காமம்
மறுகின் மறுகும் மருண்டு.
(1139)
விளக்கம்:

பொறுத்திருந்ததனாலே எல்லாரும் அறிந்தாரில்ஸெ என்று நினெத்தே, என் காமநோயானது, இவ்வாறு தெருவிலே பலரும் அறியுமாறு மயங்கித் திரிகின்றது போலும்.

யாங்கண்ணிற் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு.
(1140)
விளக்கம்:

யாம் பட்ட இந்தப் பிரிவுத் துன்பத்தை அவர்களும் அடையாததாலேதான், அறிவில்லாதவர், யாம் கண்ணாற் காணும்படியாக எம் எதிரே நின்று சிரிக்கின்றனர்.

No comments:

Post a Comment